தம்பதிக்கு தலா 20 ஆண்டு சிறை


தம்பதிக்கு தலா 20 ஆண்டு சிறை
x

தம்பதிக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவருடைய மனைவி நதியா (31). இவர்கள் 2 பேரும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தொடர்பான சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த சரவணன், நதியாவிற்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். மேலும் விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்றம், போக்சோ வழக்கில் பெண்ணிற்கு தண்டனை வழங்கியது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story