தீ விபத்தில் குடிசை எரிந்து நாசம்


தீ விபத்தில் குடிசை எரிந்து நாசம்
x

தீ விபத்தில் குடிசை எரிந்து நாசமானது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாயி (வயது 55). இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் நேற்று முன்தினம் ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story