குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது


குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது
x

கொள்ளிடம் அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே சீயாளம் ஊராட்சி கண்ணன் குளம் கிராமத்தில் மணிமேகலை வெங்கடேசன் என்பவரின் குடிசைவீடு நேற்று முன்தினம் மின்கசிவின் காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி தாசில்தார் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி அரசின் நிவாரண பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானு சேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story