சோளத்தட்டை போர் தீயில் எரிந்து நாசம்


சோளத்தட்டை போர் தீயில் எரிந்து நாசம்
x

சோளத்தட்டை போர் தீயில் எரிந்து நாசம் ஆனது.

கரூர்

புகளூர் அருகே முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லுசாமி மனைவி சகுந்தலா (45). இவர் வீட்டின் அருகே கால்நடைகளுக்கு தீவனமாக போடுவதற்கு சோளத்தட்டை போர் போட்டு வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென சோளத்தட்டு போரில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று சோளத்தட்டை போரில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சோளத்தட்டு போர் முழுமையாக தீயில் எரிந்து நாசமானது.


Related Tags :
Next Story