ஜெகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
ஓகைப்பேரையூர் ஜெகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடந்தது.
திருவாரூர்
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே உள்ள, ஓகைப்பேரையூரில் ஜெகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த கிராம மக்கள் தீர்மானித்து திருப்பணி பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணி பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று காலை குடமுழுக்கு நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம் உள்ளிட்ட 4 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கடம் புறப்பாடு புறப்பட்டு கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story