ஆல்கொண்டமால் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு


ஆல்கொண்டமால் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
x

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆல்கொண்டமால் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திருப்பூர்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆல்கொண்டமால் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ஆல்கொண்டமால் கோவில்

உடுமலை அருேக உள்ள சோமவாரப்பட்டியில் பழங்காலத்தில் அடர்ந்த காடுகளில் விஷப் பாம்புகள் வாழும் ஆலமரத்தின் கீழ் சிவலிங்க வடிவில் ஒரு புற்று இருந்தது. இந்தப் பகுதியில் மேய்ந்த பசுக்கள் புற்றில் நிலையாக பாலை சுரந்து வந்தன. சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ள எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்த பசுவானது பாம்பினால் தீண்டப்பட்டு பாதிக்கப்பட்டது.

அப்போது அந்தப் பசுவின் உடம்பின் மீது ஏறிய ஆலகால விஷத்தினை மாயவன் உண்டு பசுவினை காப்பாற்றியதால் ஆல்கொண்டமால் எனவும் ஆலம் உண்ட சிவனை குறிக்கும் வகையில் சிவலிங்க வடிவ புற்றில் கண்ணன் குடிகொண்டதால் ஆல்கொண்டமால் எனவும் இக்கோவில் விளங்கி வருகிறது.

காவல் தெய்வம்

கால்நடைகளின் காவல் தெய்வமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாள் திருவிழாவின் போது கிராம புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் கால்நடைகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு கால்நடைகளின் உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்கின்றனர்.

கறவை பாலைகொண்டு வந்து ஆல்கொண்டமாலுக்கு அபிஷேகம் செய்து திருநீறும் தீர்த்தமும் பெற்று செல்கின்றனர். நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து ஆல்கொண்டமாலுக்கு பால் அபிஷேகம் செய்தும் கால்நடைகளுக்கு பூஜை செய்தும் வழிபாடு செய்தனர்.


Related Tags :
Next Story