திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழா


திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழா
x

திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழா 2-வது நாளாக விடிய விடிய நடந்தது.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழா 2-வது நாளாக விடிய விடிய நடந்தது.

தியாகராஜர் கோவில்

திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டு கடந்த மார்ச் 15-ந் தேதி ஆழித்தேரோட்ட விழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக தெப்ப உற்சவம் விடிய விடிய நடந்தது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்

விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பார்வதி- கல்யாணசுந்தரர் எழுந்தருள தெப்பம் இரவு 8.15 மணிக்கு குளத்தின் கீழ் கரை பகுதியில் புறப்பட்டு 3 முறை வலம் வந்தது. வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் தண்ணீர் மிதந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

விடிய, விடிய நடைபெற்ற தெப்பத் திருவிழாவை காண கமலாலய குளத்தின் 4 கரைகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.


Next Story