பெரியநாயகி அம்மன் கோவிலில் வருடாபிஷேகம்


பெரியநாயகி அம்மன் கோவிலில் வருடாபிஷேகம்
x
தினத்தந்தி 19 Aug 2023 7:15 PM GMT (Updated: 19 Aug 2023 7:15 PM GMT)

பெரியநாயகி அம்மன் கோவிலில் வருடாபிேஷகம் நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் பெரியநாயகி அம்மன், பெத்தார்ண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு முடிந்து முதலாம் ஆண்டு வருடாபிேஷகம் நடந்தது. இதை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் நடந்தன. இதில் பெரியநாயகி அம்மனுக்கு தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டது. பக்தர்கள் சீர்வரிசைகள் எடுத்து வந்தனர். சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடந்தன. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனர்.


Next Story