மதுரையில் வாலிபர் வெட்டிக்கொலை


மதுரையில் வாலிபர் வெட்டிக்கொலை
x

மதுரையில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் 3 பேரை தேடி வருகின்றனர்.

மதுரை

மதுரையில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் 3 பேரை தேடி வருகின்றனர்.

வெட்டிக்கொலை

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள மேலவாசல் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெபமணி (வயது 32). பிரபல ரவுடியான இவர் மீது கொலை கொள்ளை உள்பட சுமார் 22-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு அவரது 5 வயது மகளின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினார். பின்னர் மது அருந்திவிட்டு வீட்டின் அருகே ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெபமணியை சரமாரியாக கத்தியால் குத்தியும் அருவாளால் வெட்டியும் கொலை செய்துவிட்டு தப்பி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து திடீர்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து ஜெபமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெபமணியை போலீசார் பிடிக்க வரும்போது அவர் தனக்கு தானே கையில் பிளேடால் கீறி கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்வது போல் நடிப்பார். மேலும் போலீஸ் அடித்ததாக நீதிபதியிடம் கூறுவேன் என்று மிரட்டவும் செய்வார். எனவே போலீசார் இவரை கண்டு அஞ்சுவதும் உண்டு என்று இந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Next Story