வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x

ஆலங்குளத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் அய்யப்பசாமி மகன் பிரேம்சூர்யா (வயது 25). இவர் ஆலங்குளத்தில் உள்ள ஜவுளிக்கடை ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் சில மாதங்களுக்கு முன்பு குறைந்த விலைக்கு கார் ஒன்றை வாங்கினார். அந்த கார் அடிக்கடி பழுதானதாக கூறப்படுகிறது. தனது கையில் உள்ள பணத்தை வைத்து காரை பழுது பார்த்துள்ளார். ஆனால் அடிக்கடி கார் பழுதான காரணத்தால் தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் பிரேம்சூர்யாவை கண்டித்தனர். இதில் மனமுடைந்து காணப்பட்ட பிரேம்சூர்யா நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story