கிருஷ்ணகிரியில்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரத போராட்டம்


கிருஷ்ணகிரியில்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 18 March 2023 7:00 PM GMT (Updated: 18 March 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரில் மாவட்ட கிளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றகோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அருண் பிரகாஷ்ராஜ் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தின் போது பங்களிப்பு ஓய்வூதியத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மாவட்ட கல்வி அலுவலகங்கள் (தொடக்க கல்வி) மற்றும் வட்டார கல்வி அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

முடிவில் மாவட்ட பொருளாளர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.


Next Story