தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் கடைகள் மூடல்


தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் கடைகள் மூடல்
x
தினத்தந்தி 25 Sep 2023 6:45 PM GMT (Updated: 25 Sep 2023 6:45 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெங்கடேஷ் பண்ணையார் 20-வது நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, சாத்தான்குளம், ஏரல், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய வட்டங்களில் உள்ள 68 டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்னைய தினம் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story