டாஸ்மாக் விற்பனையாளர் சாவு


டாஸ்மாக் விற்பனையாளர் சாவு
x

ராசிபுரத்தில் மொபட்டில் இருந்து தவறி விழுந்து டாஸ்மாக் விற்பனையாளர் பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல்

ராசிபுரம்

டாஸ்மாக் விற்பனையாளர்

ராசிபுரம் டவுன் 4-வது வார்டு காலனி சந்து பகுதியைச் சேர்ந்தவர் பூமலை. இவரது மகன் இளையராஜா (வயது 42). இவரது மனைவி கஸ்தூரி (36). இவர்களுக்கு கனிஸ்கா (14) என்ற மகனும், தீபனா (10) என்ற மகளும் உள்ளனர். இளையராஜா ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 7-ந் தேதி இரவு இவர் தனது மொபட்டில் ராசிபுரம்-புதுப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இளையராஜா மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த இளையராஜாவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சாவு

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இளையராஜா பரிதாபமாக இறந்தார். இது பற்றி இளையராஜாவின், அண்ணன் வெங்கடேசன் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான இளையராஜாவின் உடல் பிரேத பரிசோதனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது.


Next Story