வாங்கிய கடனை கொடுக்காத தொழிலாளி மீது தாக்குதல்


வாங்கிய கடனை கொடுக்காத தொழிலாளி மீது தாக்குதல்
x

வாங்கிய கடனை கொடுக்காத தொழிலாளி மீது தாக்குதல் நடந்தது.

கரூர்

தரகம்பட்டி அருகே உள்ள டி.அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 47). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் ரூ.50 ஆயிரத்தை கடனாக வாங்கி விட்டு, நீண்ட நாட்களாக கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெருமாளிடம், நாகராஜ் தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ், பெருமாளை தகாதவார்த்தையால் திட்டி மண்வெட்டியால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த பெருமாள் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பெருமாள் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின்பேரில், சிந்தாமணிப்பட்டி போலீசார் நாகராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story