காஞ்சனகிரி மலைக்கோவில் உண்டியலில் பணத்தை திருடியவர், மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி செலுத்திய ஆச்சரியம்


காஞ்சனகிரி மலைக்கோவில் உண்டியலில் பணத்தை திருடியவர், மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி செலுத்திய ஆச்சரியம்
x

உண்டியலில் பணத்தை திருடியவர் மன்னிப்பு கடிதத்துடன் பணத்தை உண்டியலில் திருப்பி செலுத்தியுள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

உண்டியலில் பணத்தை திருடியவர் மன்னிப்பு கடிதத்துடன் பணத்தை உண்டியலில் திருப்பி செலுத்தியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே புகழ்பெற்ற காஞ்சனகிரிமலையில் ஈஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக நடைபெற்றது. இக்கோயில் வளாகத்தில் 1008 சுயம்பு லிங்கங்கள் உள்ளன. சித்ராபவுர்ணமி நடைபெற்ற சில தினங்களுக்குள், இங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் சிப்காட் போலீசில் புகார் செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று கோவில் நிர்வாகத்தினர் 1008 சுயம்பு லிங்கங்கள் முன்பு வைத்திருந்த உண்டியலை திறந்து காணிக்கை பணத்தை எண்ணுவதற்கு ஏற்பாடு செய்தனர். உண்டியலை திறந்தபோது பக்தர்கள் செலுத்திய பணத்துடன், ஒரு கடிதமும் அதனுள் 500 ரூபாய் நோட்டுகள 20 கட்டுகளாக ரூ.10 ஆயிரம் இருந்தது. அந்த சீட்டை பிரித்துப் பார்த்தபோது அதில், ''என்னை மன்னித்து விடுங்கள். நான் சித்ரா பவுர்ணமி கழித்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி விட்டேன். அப்போதிருந்து எனக்கு நிம்மதியில்லை. அப்புறம் வீட்டில் நிறைய பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. எனவே நான் மனம் திருந்தி அதே உண்டியலில் ரூ 10,000 போட்டு விட்டேன. எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். கடவுளும் என்னை மன்னிப்பாரா தெரியாது. வணக்கம்'' என்றிருந்தது.

இதனையடுத்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த கோயில் நிர்வாகத்தினர் இந்த கடிதத்தை சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story