விபத்தில் இறந்த வாலிபருக்கு சம்மன்


விபத்தில் இறந்த வாலிபருக்கு சம்மன்
x

விபத்தில் இறந்த வாலிபருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அருகே உள்ள கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் அரவிந்த்(வயது 36). இவர் தன்னுடைய பொறியியல் படிப்பிற்காக திருமழபாடியில் உள்ள கனரா வங்கியில் ரூ.2 லட்சம் கடன் பெற்றுள்ளார். படிப்பு முடிந்து கடந்த ஆண்டு நேர்முக தேர்வுக்காக கும்பகோணம் சென்று விட்டு ஊருக்கு திரும்பியபோது, திருவையாறு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்.

இதையடுத்து அரவிந்தின் பெற்றோர், அவரது இறப்பு சான்றிதழுடன் வங்கியை அணுகி, வங்கி மேலாளரிடம் தகவல் தெரிவித்து விட்டனர். ஆனால் வங்கி நிர்வாகம் அரவிந்த் மீதும், அவரது தந்தை மீதும் ரூ.4 லட்சம் கடனை கட்ட வேண்டும் என்று அரியலூர் சார்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதி விசாரித்து, அரவிந்த் மற்றும் அவரது தந்தை பன்னீர்செல்வம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி, நேரில் ஆஜராக உத்தரவிட்டார். வங்கியில் இறப்பு சான்றிதழுடன் எழுதி கொடுத்த பின்னரும் விபத்தில் இறந்த மகனுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளதை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.


Next Story