நாமக்கல்லில் ஓட்டல் தொழிலாளி திராவகம் குடித்து தற்கொலை


நாமக்கல்லில்  ஓட்டல் தொழிலாளி திராவகம் குடித்து தற்கொலை
x

நாமக்கல்லில் ஓட்டல் தொழிலாளி திராவகம் குடித்து தற்கொலை

நாமக்கல்

நாமக்கல் என்.கொசவம்பட்டி அன்புநகரை சேர்ந்தவர் நல்லேந்திரன் (வயது 35). ஓட்டல் தொழிலாளி. இவருடைய மனைவி உஷா. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்த நல்லேந்திரன், வீட்டில் இருந்த திராவகத்தை குடித்து விட்டதாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு சிகிச்சை பலனின்றி நல்லேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை கிருஷ்ணசாமி (61) நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story