நாமக்கல்லில் சாப்ட்வேர் என்ஜீனியர் தற்கொலை


நாமக்கல்லில்   சாப்ட்வேர் என்ஜீனியர் தற்கொலை
x

நாமக்கல்லில் சாப்ட்வேர் என்ஜீனியர் தற்கொலை

நாமக்கல்

நாமக்கல் அருகே உள்ள வேலகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் தீபக் (வயது 21). சாப்ட்வேர் என்ஜீனியர். இவர் கடந்த 11-ந் தேதி நாமக்கல்- பரமத்தி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே விஷம் குடித்து கிடந்தார். தகவல் அறிந்த அவரது நண்பர்கள் அங்கு சென்று அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தீபக் இறந்தார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story