நொய்யல் ரெயில்வே கேட் திடீர் பழுது


நொய்யல் ரெயில்வே கேட் திடீர் பழுது
x

நொய்யல் ெரயில்வே கேட் திடீரென பழுதானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்

ரெயில்வே கேட்

கரூர் மாவட்டம் நொய்யல் வழியாக ெரயில்வே இரும்பு பாதை செல்கிறது .இந்த இரும்பு பாதை வழியாக சென்னை, திருச்சி, கரூர் , நாகர்கோவில் , திருநெல்வேலி, ஈரோடு, கோவை, பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதிவிரைவு ெரயில்களும், சாதாரண பயணிகள் ெரயில்களும், பல்வேறு வகையான சரக்கு ெரயில்களும் சென்று வருகின்றன.

ெரயில்கள் இருபுறமும் வரும்போது ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு முன்னர் ெரயில்கள் வரும்போது ெரயில்வே கேட் கீப்பர் அருகாமையில் உள்ள நொய்யல் ெரயில்வே கேட் கீப்பருக்கு தகவல் தெரிவிப்பார்.

நொய்யலில் சாலையின் குறுக்கே உள்ள 2 ெரயில்வே கேட்களும் மூடப்படும். ெரயில்கள் சென்ற பிறகு சில நிமிடங்களில் மீண்டும் ெரயில்வே கேட் திறக்கப்பட்டு அந்த தார் சாலை வழியாக இருபுறமும் செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள் ,கார்கள் ,வேன்கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் செல்கின்றன.

திடீர் பழுது

இந்தநிலையில் நேற்று காலை 12 மணி அளவில் ெரயில் செல்வதற்காக கேட் மூடப்பட்டது. ெரயில் சென்று சில நிமிடங்களில் மீண்டும் ெரயில்வே கேட்டை திறந்த போது 2 ெரயில்வே கேட்டுகளும் திறக்க முடியாமல் பழுதடைந்து விட்டது. அதன் காரணமாக நேற்று பகல் 12 மணி முதல் கோவை, ஈரோடு, கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த ெரயில்வே கேட் வழியாக செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும், கார்கள் வேன்கள், லாரிகள் இருசக்கர வாகன ம் உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியாமல் நின்றன.

இதனால் நொய்யல் அருகே குறுக்குச்சாலை, புன்னம்சத்திரம், வேலாயுதம் பாளையம் வழியாக பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, நாமக்கல், சேலம் பகுதிக்கும், அதேபோல் பரமத்தி வேலூர், நாமக்கல், சேலம் பகுதியில் இருந்து கொடுமுடி, ஈரோடு, கோவை, வெள்ளகோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வேலாயுதம்பாளையம், புன்னம்சத்திரம், நொய்யல் குறுக்குச்சாலை வழியாக சென்றன.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த ெரயில்வே துறையை சேர்ந்த ஊழியர்கள் நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் விரைந்து வந்து மூடப்பட்டிருந்த 2 ெரயில்வே கேட்டுகளையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன் பிறகு 2 ெரயில்வே கேட்டுகளும் திறக்கப்பட்டன.

பின்னர் அனைத்து வாகனங்களும் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story