ரெயில் நிலைய வளாகத்தில் திடீர் தீ


ரெயில் நிலைய வளாகத்தில் திடீர் தீ
x

திருச்சியில் ரெயில் நிலைய வளாகத்தில் அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

திருச்சி

திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்தநிலையில் நேற்று அதிகாலை ஜங்சன் ரெயில்நிலையத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே உள்ள பார்க்கிங் பகுதியில் இருந்த காய்ந்த செடிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. சற்று காலதாமதம் ஏற்பட்டாலும் தீயில் இருசக்கர வாகனங்களும் எரிந்து சேதமடைந்து இருக்கும். போலீஸ் விசாரணையில் யாரோ மர்ம ஆசாமி புகைபிடித்துவிட்டு சிகரெட் துண்டை வீசியதால் தீப்பிடித்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story