தென்னை மரங்களில் திடீர் தீ


தென்னை மரங்களில் திடீர் தீ
x

தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது.

கரூர்

மூலிமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 50). இவர் தனது தோட்டத்தில் ஏராளமான தென்னை மரங்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தென்னை மரங்கள் உள்ள பகுதியில் ஏராளமான செடி, கொடிகள் முளைத்து காய்ந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென காய்ந்திருந்த செடி, கொடிகளிலும், தென்னை மரங்களும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பற்றிஎரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.


Related Tags :
Next Story