பேன்சி ஸ்டோரில் திடீர் தீ
விருதுநகர் அருகே பேன்சி ஸ்டோரில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
விருதுநகர்,
விருதுநகர் அருகே பட்டம்புதூர் விலக்கில் சூலக்கரையை சேர்ந்த கவிதா என்பவருக்கு சொந்தமான பேன்சி ஸ்டோர் உள்ளது. இக்கடையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீயணைப்புத்துறையினரின் நடவடிக்கையால் இக்கடையை அடுத்துள்ள 5 கடைகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மின்கசிவே தீ விபத்துக்கான காரணமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இது பற்றி சூலக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire