கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து - செங்கல்பட்டில் பரபரப்பு


கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து - செங்கல்பட்டில் பரபரப்பு
x

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சீட் மேட் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்கள் ஆன பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் மீது தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story