பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் திடீர் சாவு


பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் திடீர் சாவு
x

கந்திகுப்பம் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் திடீரென இறந்தார்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

கந்திகுப்பம் அருகே உள்ள வரட்டனப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் நவீன் (வயது 16). அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களாக வாந்தி மயக்கமாக காணப்பட்ட மாணவனை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story