திருமங்கலத்தில் சப்-இன்ஸ்பெக்டர், ஆசிரியை உள்பட 3 பேர் வீடுகளில் நகை-பணம் துணிகர கொள்ளை


திருமங்கலத்தில்  சப்-இன்ஸ்பெக்டர், ஆசிரியை உள்பட 3 பேர் வீடுகளில் நகை-பணம் துணிகர கொள்ளை
x

திருமங்கலத்தில் சப்-இன்ஸ்பெக்டர், ஆசிரியை உள்பட 3 பேர் வீடுகளில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

மதுரை

திருமங்கலம்

திருமங்கலத்தில் சப்-இன்ஸ்பெக்டர், ஆசிரியை உள்பட 3 பேர் வீடுகளில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் வீடு

மதுரை மாவட்டம் திருமங்கலம் மாயோன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). என்ஜினீயர். இவருடைய மனைவி விஜயலட்சுமி, சுப்புலாபுரம் அரசு பள்ளி ஆசிரியை.. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கடந்த 10 தினங்களாக வீடு பூட்டி இருந்தது. இதை நோட்டமிட்ட மர்ம கும்பல், வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றது.

இதே பகுதியில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் குடியிருந்து வருகிறார். இவரது குடும்பத்தினர் அனைவரும் நேற்று கரிசல்காலம்பட்டியில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்று இருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்த பகுதியில் போலீசார் குடும்பத்தினர் குடியிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நகை-பணம்

மாயோன் நகர் அருகில் உள்ள மற்றொரு தெருவை சேர்ந்தவர் சுந்தர். டிராவல்ஸ் வைத்துள்ளார். இவருடைய மனைவி ஜெயமணி, கப்பலூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மாமியார் சித்ராவும் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் அனைவரும் மாடியில் தூங்க சென்று விட்டனர். இதனை அறிந்த கொள்ளையர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 30 பவுன் நகை, ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீடுகளில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி ேதடி வருகின்றனர்.

திருமங்கலம் நகர் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story