தூய்மை உறுதிமொழி ஏற்றுக்கொண்ட மாணவர்கள்


தூய்மை உறுதிமொழி ஏற்றுக்கொண்ட  மாணவர்கள்
x

மாணவர்கள் தூய்மை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பெரம்பலூர்

தமிழக முதல்-அமைச்சர் பள்ளி கல்வித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் பள்ளி கல்வித் துறையின் சார்பில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் முதன்மையாக "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" என்ற நிகழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையிலும், அரியலூர் மாவட்டத்தில் அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையிலும் எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி நிகழ்வு நடைபெற்றது. எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி நிகழ்வானது பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத உடைந்த நற்காலிகள், மேசைகள், இ-கழிவு, மரக்கிளைகள், பழைய உபகரணங்கள், கட்டிட உடைந்த துண்டுகள் போன்றவற்றை நிரம்பி இருப்பதை அப்புறப்படுத்தி பள்ளியை தூய்மை செய்யும் வகையில் இந்நிகழ்வு செயல்படுத்தப்படுகிறது. இந்நிகழ்வானது பள்ளி அளவிலும், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைத்து செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பள்ளி தூய்மை உறுதி மொழியினை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் மாணவ-மாணவிகள் ஏற்று கொண்டனர். அப்போது அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மணிவண்ணன் (பெரம்பலூர்), விஜயலட்சுமி (அரியலூர்) ஆகியோர் உடனிருந்தனர். கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நிகழ்வு நடைபெற்ற பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழலின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மஞ்சப்பை, துணிப்பைகளை வழங்கினார்.


Next Story