மாணவர்கள் அரசியல் வேண்டாம் என்றாலும் அரசியல் யாரையும் விடாது - கனிமொழி எம்.பி


மாணவர்கள் அரசியல் வேண்டாம் என்றாலும் அரசியல் யாரையும் விடாது - கனிமொழி எம்.பி
x

மாணவர்கள் அரசியல் வேண்டாம் என்றாலும் அரசியல் யாரையும் விடாது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

தாம்பரம்,

தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறித்தவ கல்லூரியில் மகளிர் மாணவ அமைப்பு துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி கலந்துகொண்டு மகளிர் மாணவ அமைப்பை துவக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

மாணவர்கள் அரசியல் வேண்டாம் என்றாலும் அரசியல் யாரையும் விடாது. பொருளாதாரம், வேலை வாய்ப்பு, உரிமைகள் மற்றும் மாற்றங்கள் என அனைத்திற்கும் அரசியல் தான் காரணம். அதனால் தான் மாணவர்கள் அரசியல் பேசவேண்டும், அரசியலில் ஈடுபடவேண்டும்.

அரசியல் மாற்றியமைக்க கூடிய உரிமைகளை, திறமைகளை வளர்த்து கொண்டு மாணவர்கள் தெளிவு பெறவேண்டும். அதன் பெருட்டு இந்த மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி இந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது பாராட்டப்பட வேண்டியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story