தந்தை பெரியார் கல்லூரியில் மாணவர்கள் தர்ணா


தந்தை பெரியார் கல்லூரியில் மாணவர்கள் தர்ணா
x

தந்தை பெரியார் கல்லூரியில் மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

திருச்சி

திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலைக்கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மற்றும் பிற மாணவர்களுக்கும் உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும். ஆனால், இந்த கல்வி ஆண்டுக்கான உதவித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் உதவித்தொகையை உடனடியாக வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் நேற்று விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் மற்றும் கல்லூரி நிா்வாகம் சார்பில் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, விரைவில் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறியதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story