தர்ணா போராட்டம்


தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:45 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் நல சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுனர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு பயிற்றுனர்கள் ஜித்தின், பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தில் அனைத்து சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள், பள்ளி ஆயத்த மைய காப்பாளர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் சிறப்பு பயிற்றுனர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பணி பாதுகாப்பு

இதில் பள்ளி கல்வித்துறையில் ஒருங்கிணைந்த திட்டத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்காக பணியாற்றும் சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள், பள்ளி ஆயத்த மைய காப்பாளர்கள், ஆயாக்கள் ஆகியோருக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


Next Story