தனியார் தொழிற்சாலையை கிராம மக்கள் முற்றுகை போராட்டம்


தனியார் தொழிற்சாலையை கிராம மக்கள் முற்றுகை  போராட்டம்
x

சூளகிரி அருகே கழிவுநீரால் பாதிக்கப்பட்டதால் தனியார் தொழிற்சாலையை கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே சிகரப்பள்ளி பகுதியில் தனியாருக்கு சொந்தமான அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விவசாய நிலங்களில் புகுவதால் பயிர்கள் பாதிக்கப்பட்டன. மேலும் கழிவுநீரால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கிராமமக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story