வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொழிலாளர்கள் தர்ணா


வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொழிலாளர்கள் தர்ணா
x

தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி போலனஅள்ளி கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தேசிய ஊரக வேலை திட்டத்தில் 100 நாள் வேலை மற்றும் பணி அட்டை வழங்க கோரி நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி மற்றும் அலுவலர்கள் தர்ணாவில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story