எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம்
x

நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. தலைவர் சாகுல்ஹமீது உஸ்மானி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கனி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக விவசாய அணி மாநில தலைவர் சேக் அப்துல்லா கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், தற்போது பருவமழை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் காரணமாக பலர் ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே சுகாதாரத்துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

டெங்கு கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த கூடுதல் மஸ்தூர் பணியாளர்களை சுகாதாரத்துறையினர் நியமிக்க வேண்டும். மாநகர் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட செயலாளர் அன்வர்ஷா நன்றி கூறினார்.


Next Story