புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா


புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா
x

வீரக்குறிச்சி-சுக்கிரன்பட்டி புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

வீரக்குறிச்சி-சுக்கிரன்பட்டி புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புனித அந்தோணியார் ஆலயம்

பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி-சுக்கிரன்பட்டி புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா நேற்று மாலை திருக்கொடி பவனியுடன் தொடங்கியது. தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் கொடியேற்றமும், பின்னர் கூட்டுப்பாடல் திருப்பலியும் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தேர்பவனி

விழாவில் வருகிற 24,25 ஆகிய தேதிகளில் இரவு வண்ண வாண வேடிக்கைகளுடன் மின்அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல பங்குத்தந்தை ஜோசப்குழந்தை, வீரக்குறிச்சி-சுக்கிரன்பட்டி கிராம நிர்வாகம் மற்றும் கிராம பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story