புவனகிரி அருகே எஸ்எஸ்எல்சி மாணவி விஷம் குடித்து தற்கொலை தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விபரீத முடிவு


புவனகிரி அருகே எஸ்எஸ்எல்சி மாணவி விஷம் குடித்து தற்கொலை தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 27 May 2023 6:45 PM GMT (Updated: 27 May 2023 6:46 PM GMT)

புவனகிரி அருகே தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

புவனகிரி அருகே உள்ள ஜெயங்கொண்டானை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 43). இவரது மகள் அன்புமொழி (15). இவர் கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதி இருந்தார்.

இதையடுத்து கடந்த 19-ந்தேதி பொதுத்தேர்வு முடிவு வெளியானது. இதில் அன்புமொழி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றார்.

ஆனால் அதிக மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த அன்புமொழி, 500-க்கு 335 மதிப்பெண்கள் எடுத்ததால் மனமுடைந்து காணப்பட்டார்.

தற்கொலை

இதனால் சம்பவத்தன்று அவர் விஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அன்புமொழி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story