எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது


எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது
x

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம்,

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் அனைவரும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணக் குடாநாடு பகுதியில் உள்ள மீன்பிடி இயக்குனரகத்தில் ஒப்படைக்கப்படுவார்கள் என இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.


Next Story