கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி


கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி
x

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி 3-ந் தேதி நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர்

தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 3-ந் தேதி காலை 10 மணிக்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சு போட்டி நடத்தப்படவுள்ளன. இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


Next Story