சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு


சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு
x

சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு

நாகப்பட்டினம்

நாைக பகுதி விநாயகர் கோவில்களில் சங்கடஹடசதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாகாபரண விநாயகர்

நாகை பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக நாகை காயாரோகணசாமி கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

நாகூர் விருச்சிக விநாயகர்

அதேபோல் ஏழைப்பிள்ளையார் கோவில், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள, செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர், வல்லப கணபதி, மாவடி பிள்ளையார், நீலா மேல வீதியில் உள்ள சாபம் தீர்த்த விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர், காடம்பாடி சாலமன் தோட்டத்தில் உள்ள செல்வ விநாயகர், மறைமலைநகரில் உள்ள நவசக்தி விநாயகர், சொக்கநாதர் கோவில் தெருவில் உள்ள வீர சொக்கநாத விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இரட்டை விநாயகர்

நாகை வெளிப்பாளையம் இரட்டை விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் இரட்டை விநாயகர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story