சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

மாவட்டம் முழுவதும் பிரேதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திண்டுக்கல்

அபிராமி அம்மன் கோவில்

பிரதோஷ நாட்களில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி பிரதோஷ நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சுவாமி காளகத்தீசுவரர் மற்றும் நந்திக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் கோவிலின் உள் பிரகாரத்தில் 3 முறை வலம் வருதல் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் திண்டுக்கல் மலையடிவாரம் ஓதசுவாமிகள் கோவில், நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், முள்ளிப்பாடி திருக்காமேஸ்வரர்-கோகிலாம்பாள் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பழனி மலைக்கோவில்

இதேபோல் பிரதோஷத்தையொட்டி பழனி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. அதன்படி பழனி பட்டத்து விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

முன்னதாக சிவபெருமானுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

பழனி மலைக்கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி, பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, பெரியாவுடையார் கோவில், தட்டான்குளம் சிவன் கோவில், ஆயக்குடி சிவன் கோவில் என அனைத்து சிவன் கோவில்களிலும் மகா பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நத்தம் கைலாசநாதர்

இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில், ஆவணி மாத பிரதோஷ பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி மூலவர் செண்பகவல்லி, சமேத கைலாசநாதருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் அங்குள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், தீர்த்தம், வில்வ இலை உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த பூஜையில் நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story