சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூர்

வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் ஆடி மாத சிவராத்திரியையொட்டி சுவாமிக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல் திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவில், புன்னம் புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவில் மற்றும், தோட்டக்குறிச்சி, மண்மங்கலம், நன்னீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.


Next Story