சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


நாமக்கல் மாவட்டத்தில் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நாமக்கல்

ஆடி பிரதோஷம்

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஆடி மாத பிரதோஷத்தை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர்,

கோப்பணம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள பரமேஸ்வரர், பொத்தனூரில் உள்ள காசிவிஸ்வநாதர், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் உள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், அலங்காரமும் நடைபெற்றது. பிரதோஷ விழாவில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அசலதீபேஸ்வரர்

இதேபோல் மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் அசலதீபேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிமாத பிரதோஷத்தையொட்டி நேற்று மூலவர் அசலதீபேஸ்வரர் மற்றும் நந்திபகவானுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், பூஜையும், அலங்காரம் செய்யப்பட்டது. பல்வேறு தீப உபசரிப்புகளுடன் மகாதீபம் காண்பிக்கப்பட்டது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை சுற்றிவந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பகதர்கள் தரிசனம் பெய்தனர்.


Next Story