அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர்

கடைசி வெள்ளிக்கிழமை

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் கரூர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் கோவிலின் முன்பு தீபம் ஏற்றி பயபக்தியுடன் வழிபாடு நடத்தினர்.

வேம்பு மாரியம்மன்

இதேபோல் வெங்கமேடு காமாட்சியம்மன், கரூர் வேம்பு மாரியம்மன், அரசு காலனி மகா புற்றுருக்கண் மாரியம்மன், தாந்தோணிமலை ஊரணி காளியம்மன், முத்து மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களிலும் நேற்று பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிப்பட்டு சென்றனர்.

நொய்யல்-வேலாயுதம்பாளையம்

புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் தளவாப்பாளையம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.


Next Story