விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள வருண கணபதி ேகாவிலில் ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. வேலாயுதம்பாளையம் கடைவீதியில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இ்க்கோவிலில் விநாயகருக்கு பால், இளநீர், பன்னீர், விபூதி உள்பட 16 வகையான வாசனை ெபாருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மலர்களாலும், அருகம் புல்களாலும் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனா்.


Next Story