ஓசூரில் கல்வி, கலை வளர்ச்சிகாக சிறப்பு வழிபாடு; குழந்தைகள் கையால் அம்மனுக்கு அபிஷேகம்


ஓசூரில் கல்வி, கலை வளர்ச்சிகாக சிறப்பு வழிபாடு; குழந்தைகள் கையால் அம்மனுக்கு அபிஷேகம்
x

இந்த சிறப்பு வழிபாட்டில் 7 வயது வரை உள்ள குழந்தைகள் தங்கள் கைகளால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறந்து விளங்க சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் 7 வயது வரை உள்ள குழந்தைகள் தங்கள் கைகளால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

பால், தயிர், குங்குமம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவை கொண்டு அம்மனுக்கு குழந்தைகள் அபிஷேகம் செய்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.


Next Story