அமாவாசை சிறப்பு பூஜை


அமாவாசை சிறப்பு பூஜை
x

அமாவாசை சிறப்பு பூஜை

கோயம்புத்தூர்

ஆனைமலை

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சயன நிலையில் அம்மன் அருள்பாலிக்கிறார். இங்கு நடைபெறும் அமாவாசை பூஜை சிறப்பு வாய்ந்தது. அதன்படி வைகாசி மாத அமாவாசையையொட்டி மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் மிளகாய் அரைத்து நீதிக்கல் தெய்வத்திற்கு பூசி வழிபட்டனர். மேலும் வேண்டுதலை முறையிட்டு சீட்டில் எழுதி சிறப்பு வழிபாடு செய்தனர். அமாவாசை பூஜையையொட்டி ஆனைமலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், திருப்பூர், மதுரை போன்ற வெளியூர்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை ஆணையர் மற்றும் அலுவலர்கள் செய்தனர்.


Next Story