முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

கரூர்

வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வளர்பிறை சஷ்டியையொட்டி சுவாமிக்கு பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.

இதேபோல் நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல வேலாயுதம்பாளையம், நொய்யல் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story