அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர்

ஆடிமாத 2-வது வெள்ளிக்கிழமை

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். அதிலும் ஆடி வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து அம்மனுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினால் திருமண தடை நீங்கும், குழந்தை இல்லாதோருக்கு மகப்பேறு கிட்டும், வாழ்க்கையில் சகல துன்பங்களும் நீங்கி மகிழ்ச்சி பொங்கும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. அந்த வகையில் நேற்று ஆடி மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி கரூர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அம்மனுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் கோவிலின் முன்பு தீபமேற்றியும், சூடமேற்றியும், உப்பு வைத்து பயபக்தியுடன் வழிபாடு நடத்தினர். பின்னர் கோவிலின் முன்புற பகுதியில் பக்தர்கள் சார்பில் கூழ், பொங்கல், சுண்டல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜை

இதேபோல தாந்தோன்றிமலையில் உள்ள ஊரணி காளியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதனையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். பின்னர் அம்மனுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் கரூர், தாந்தோன்றிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

இதேபோல் கரூர் காந்திகிராமம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு பால், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் மாரியம்மனுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வரலட்சுமி அலங்காரம்

இதேபோல் கரூர் பசுபதிபுரத்தில் உள்ள வேம்பு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி வேம்பு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வேம்பு மாரியம்மன் வரலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அம்மனுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல வெங்கமேட்டில் அமைந்துள்ள காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அம்மன் பண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கரூரில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நொய்யல்

புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு

பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.


Related Tags :
Next Story