அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரூர்

புன்னம்சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் தளவாப்பாைளயத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால் உள்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்கள் கொண்டு சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் அம்மன் கோவில்களில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story