சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்


சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
x

சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூர்

புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு புன்னைவனநாதருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் நன்செய் புகழூர், திருக்காடுதுறை, குந்தாணி பாளையம் உள்பட நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story