முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்


முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
x

முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கரூர்

நொய்யல் அருகே நன்செய் புகழூரில் உள்ள அக்ரஹாரத்தில் சுப்பிரமணியர் சுவாமிக்கு வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பில் சுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வளர்பிறை சஷ்டியையொட்டி சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல் வேலாயுதம்பாளையம், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story