அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்


அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
x

அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூர்

புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல், புன்னம், சேமங்கி மாரியம்மன், நொய்யல், அத்திப் பாளையம், தவிட்டுப்பாளையம், நன்செய் புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story